உள்ளூர் செய்திகள்

வேனை நடுவழியில் நிறுத்திவிட்டு மதுபோதையில் தூங்கிய டிரைவர்

Published On 2023-09-08 09:24 GMT   |   Update On 2023-09-08 09:24 GMT
  • பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவ-மாணவிகள் தவிப்பு
  • வேனை பறிமுதல் செய்து மதுபோதையில் இருந்த டிரைவரிடம் போலீசார் விசாரணை

வடவள்ளி,

கோவைப்புதூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வதற்காக வேன் வசதி உள்ளது. இந்த நிலையில் 12 மாணவர்களை ஏற்றிக் கொண்டு ஒரு வேன் பள்ளிக்கூடத்துக்கு புறப் பட்டு வந்தது.

அப்போது டிரைவர் மது போதையில் இருந்ததாக தெரிகிறது.

எனவே அவர் வடவள்ளி குருசாமி நகர் பகுதியில் நடுரோட்டில் வண்டியை நிறுத்தி விட்டு ஸ்டியரிங் மீது உட்கார்ந்த நிலையில் தூங்கினார். எனவே வேனுக்குள் இருந்த மாணவ- மாணவிகள் எப்படி பள்ளிக்கு செல்வது என்று தெரியாமல் தவித்து நின்றனர். இந்த நிலையில்அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து மாற்று வேன் ஏற்பாடு செய்யப்பட்டு, 12 குழந்தைகளும் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்ட னர்.

இதற்கிடையே மது போதையில் வாகனம் ஓட்டி வாகனத்தை நடுரோ ட்டில் நிறுத்திவிட்டு தூங்கிய வேன் டிரைவர் செந்தில் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர் வடவள்ளி போலீசாரிடம் புகார் அளித்தனர்.

புகாரின்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட வேனை பறிமுதல் செய்து, அதனை மதுபோதையில் ஓட்டி டிரைவர் செந்திலிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News