உள்ளூர் செய்திகள்

சூலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து பணம் கொள்ளை

Published On 2023-07-28 15:07 IST   |   Update On 2023-07-28 15:07:00 IST
  • சண்முகபிரியா கணவர் வேலை விஷயமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்
  • பணத்தை கொள்ளையடித்த மர்மநபரை தேடி வருகின்றனர்.

கோவை,

கோவை சூலூர் அருகே உள்ள பட்டணம் காவேரி நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி சண்முக பிரியா (வயது 32).

சம்பவத்தன்று இவரது கணவர் வேலை விஷயமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். வீட்டில் தனியாக இருந்த சண்முக பிரியா வீட்டை பூட்டி விட்டு சிங்காநல்லூரில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றார்.

அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே சென்றனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.49 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

மறுநாள் வீட்டிற்கு சென்ற சண்முகபிரியா கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி யடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பணம் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் சூலூர் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் கதவை உடைத்து பணத்தை கொள்ளை யடித்து சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News