உள்ளூர் செய்திகள்
கடன் தொல்லையால் தவித்த டீக்கடைக்காரர் திடீர் மாயம்
- டீக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார்.
- அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள், அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை.
நாமக்கல்:
நாமக்கல் கோட்டை பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் தினகரன். இவரது மகன் பாலாஜி (வயது 43). இவர் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள், அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து அவர்கள் நாமக்கல் நகர போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரித்தபோது, பாலாஜி கடன் தொல்லையால் தவித்து வந்ததாகவும், இதனால் ஏற்பட்ட விரக்தியில் எங்காவது சென்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி, பாலாஜியை தீவிரமாக தேடி வருகின்றனர்.