உள்ளூர் செய்திகள்

செல்போன் தொடர்ந்து பார்த்து வந்ததை பெற்றோர் கண்டித்ததால் மாணவி தற்கொலை

Published On 2022-07-07 08:10 GMT   |   Update On 2022-07-07 10:29 GMT
  • செல்போன் தொடர்ந்து பார்த்து வந்ததை பெற்றோர் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
  • பள்ளி மாணவி கோபத்தில் பூச்சி மருந்து குடித்து மயக்க நிலையில் இருந்தார்.

கடலூர்:

கடலூர் அருகே குறிஞ்சி நகர் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் அரசு பள்ளியில்ம் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது மகள் சரியாக படிக்காமலும், வீட்டு வேலை செய்யாமலும், எப்போதும் ெசல்போன் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவரது பெற்றோர்கள் கண்டித்தனர். இதன் காரணமாக பள்ளி மாணவி கோபத்தில் பூச்சி மருந்து குடித்து மயக்க நிலையில் இருந்தார். இதனை பார்க்க பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து பள்ளி மாணவியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது பள்ளி மாணவிக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News