உள்ளூர் செய்திகள்

வாய்க்காலில் கவிழ்ந்து கிடக்கும் கார்.

கார் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து

Published On 2022-09-11 13:16 IST   |   Update On 2022-09-11 13:16:00 IST
  • அபிலேஷ் குடும்பத்தினருடன் வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
  • காரில் பயணித்த 2 ஆண்கள், ஒரு பெண், 2 குழந்தைகள் என 5 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கருவப்பஞ்சேரி என்கிற இடத்தில் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த அபிலேஷ் குடும்பத்தினருடன் வேளாங்கண்ணிக்கு கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

தூக்க கலக்கத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் அருகே இருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது.

அப்பகுதி மக்கள் விரைந்து வந்து காரில் பயணித்த 2 ஆண்கள், ஒரு பெண், 2 குழந்தைகள் என 5 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வேளாங்கண்ணி புறப்பட்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து எடையூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News