உள்ளூர் செய்திகள்
அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- குறிப்பிட்ட ஜாதி பற்றி எழுதிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க சிபிஎம்எல் மக்கள் விடுதலைக் கட்சி வலியுறுத்தி உள்ளது.
- அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் சிபிஎம்எல் மக்கள் விடுதலைக் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அருணாச்சலம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவி ஏற்று 8 ஆண்டுகள் நிறைவு பெற்றதை வாழ்த்தி பா.ஜ.க.வின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை வாழ்த்தி கவிதை எழுதியுள்ளார். அதில் எந்த தவறும் இல்லை.
ஆனால் தமிழகத்தின் ஒரு ஜாதியை ஒப்பிட்டு எழுதி உள்ளார்.
இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.