உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம் நடந்தது.

தலைஞாயிறில், காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Published On 2023-03-28 07:12 GMT   |   Update On 2023-03-28 07:12 GMT
  • ராகுல்காந்தியின் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
  • கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேதாரண்யம்:

ராகுல்காந்தியின் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு கடை தெருவில் காங்கிரஸ் கட்சியினர் மபநில பொதுச் செயலாளர் விவசாய பிரிவு சுர்ஜித் சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வழக்கறிஞர் அருண்சோரி முன்னிலை வகித்தார். நாகை மாவட்ட தலைவர் அமிர்தராஜா சிறப்புரை ஆற்றினார். தி.மு.க ஒன்றிள செயலாளர் மகாகுமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன், இந்திய கம்யூஸ்ட் கட்சி முன்னாள்மாவட்ட செயலாளர் சம்பந்தம் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் ராஜா, விடுதலை சிறுத்தை தொகுதி அமைப்பாளர் இளையராஜா, காங்கிரஸ் கட்சி மாவட்ட இணை செயலாளர் பாரதிராஜா ,வட்டார தலைவர் கனகராஜ் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

முடிவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் நடேசன் நன்றி கூறினார் .

Tags:    

Similar News