உள்ளூர் செய்திகள்

உயிரிழந்த 2 சிறுமிகள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்-கிராம மக்கள் கோரிக்கை

Published On 2022-06-09 10:27 GMT   |   Update On 2022-06-09 10:27 GMT
  • உயிரிழந்த 2 சிறுமிகள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • 3 வாரங்களாக காய்ச்சல் வேகமாக பரவியது.

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே காசிநாதபுரத்தில் 2 குழந்தைகள் அடுத்தடுத்து பலியான சம்பவத்தால் கிராம மக்கள் மிகவும் ஆவேசம் அடைந்தனர். அவர்கள் கிராமத்திற்குள் ஆய்வு செய்ய வந்த சுகாதாரத்துறையினரை முற்றுகையிட்டு, 3 வாரங்களாக காய்ச்சல் வேகமாக பரவியது.

அப்போது வராமல், குழந்தைகள் இறப்பிற்கு பின்னர் தான் எங்கள் கிராமத்திற்கு வரவேண்டுமா என்று கேட்டனர். மேலும் உயிரிழந்த 2 சிறுமிகளின் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News