உள்ளூர் செய்திகள்

திசையன்விளை அருகே கோவில் பூட்டை உடைத்து நகை திருட்டு

Published On 2022-12-19 09:43 GMT   |   Update On 2022-12-19 09:43 GMT
  • அழகப்பபுரத்தில் வட பத்திரகாளி அம்மன் கோவிலில் காலை வழக்கம்போல் பூஜை செய்வதற்காக பூசாரி சுந்தரமூர்த்தி வந்தார்
  • அப்போது கோவில் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கோவில் நடை திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்

திசையன்விளை:

திசையன்வினை அருகே உள்ள அழகப்பபுரத்தில் வட பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக சுந்தரமூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கோவில் நடை திறந்துகிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தங்க பொட்டு செயின், தங்ககாசு, தங்ககம்மல், வெள்ளி கிரிடம் ஆகியவை திருட்டு போய் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா முத்துசாமி திசையன்விளை போலீசில் புகார் செய்தார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து நகை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்.

Tags:    

Similar News