உள்ளூர் செய்திகள்

கோவில் யானை தாக்கி பாகன் பலி: ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கிய அமைச்சர் சேகர்பாபு

Published On 2024-11-24 11:07 IST   |   Update On 2024-11-24 13:31:00 IST
  • இறந்த இடத்தையும், தெய்வானை யானையையும் பார்வையிட்டார்.
  • முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் கடந்த 18-ந் தேதி தெய்வானை யானை தாக்கி யதில் யானை பாகன் உதய குமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் இறந்தனர்.

இந்த துயர செய்தியை கேட்டவுடன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் யானை பாகன் உதயகுமார், அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்து, நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சம்பவ இடத்தை இன்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு சம்பவம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் யானை தெய்வானைக்கு கரும்பு கொடுத்தார்.


அதை யானை வாங்கி சாப்பிட்டு தலையை அசைத்தது. பின்னர் அமைச்சர் சேகர் பாபு கோவிலுக்கு சென்று சுவாமி மூலவர் மற்றும் சண்முகர் சன்னதியில் தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் யானை பாகன் உதயகுமார் வீட்டிற்கு சென்று அவரது மனைவி ரம்யாவிடம், முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம், கோவில் நிதியில் இருந்து ரூ. 5 லட்சம், தக்கார் அருள் முருகன் சார்பில் ரூ.3 லட்சம் என மொத்தம் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

தொடர்ந்து அவர் சிசு பாலன் மகள் அஷ்யாவிடம், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம், தக்கார் அருள் முருகன் சார்பில் ரூ.3லட்சம் என ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் கூறியதாவது:-

யானை பாகன் இறந்த 10 நிமிடத்தில் யானை இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. யானை பாகன் உயிரிழப்பு பாதிப்பில் இருந்து இன்னும் அது மீள வில்லை. யானை சரிவர உணவை உட்கொள்வதை தவிர்க்கிறது. தற்போது யானை நலனுடன் உள்ளது. 5 துறை சார்ந்த அதிகாரிகள் குழு யானையின் உடல் நிலையை கண்காணித்து வருகின்றனர்.


திருச்செந்தூர் கோவில் சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. யானைகள் குளிப்பதற்கு பிரத்யேக நீச்சல் குளம் உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

யானைகளுக்கு தேவையான அனைத்தும் செய்யக்கூடிய நிலையில் ஆண்டுதோறும் நடக்கும் புத்துணர்வு முகாம்களுக்கு அனுப்புவதா? இல்லையா? என்பது தொடர்பாக வனத்துறை மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகளோடு ஆலோசனை செய்து முதல்-அமைச்சரின் உத்தரவை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

புத்துணர்வு முகாமிற்கு அனுப்புவதற்கான பரிந்து ரைகள் வந்தால் அந்த பணி மேற்கொள்ளப்படும். கோவிலில் நடந்த சம்ப வத்தில் எந்த ஒளிவு மறைவு இல்லாமல் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுளளது.துறை சார்ந்த குழு தொடர் கண்காணிப்பு நடந்து வருகிறது.

கால்நடை, வனத்துறை மருத்துவர்கள் குழு தொடர்ந்து அங்கேயே இருந்து கண்காணித்து வருகின்றனர். கண்காணிப்பு பணிகள் முடிந்த உடன் அடுத்தகட்ட நடவடிக்கை முதல்-அமைச்சரின் ஆலோ சனை படி எடுக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள 28 கோவில்களில் யானைகளுக்கு தேவையான அனைத்தும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.

யானைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் மூலம் தொடர் கண்காணிப்பு பணி மருத்துவர்களின் பரிந்து ரைப்படி உணவுகள், தேவையான மருத்துவ சிகிச்சைகள் போன்றவைகள் வழங்கப்பட்டுள்ளது

யானை பாகன் உதயகுமார் மனைவிக்கு தகுதிக்கு தகுந்த வேலை வாய்ப்பு வழங்கப்படும். அவரது குழந்தைகள் படிப்புச் செலவை இந்த தொகுதி அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், கனிமொழி எம்.பி. ஆகியோர் ஏற்றுக் கொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அமைச்சர் சேகர் பாபுவுடன் கோவில் தக்கார் அருள் முருகன், இந்து சமய அறநிலைய முதன்மை செயலாளர் சந்திரமோகன், ஆணையர் ஸ்ரீதர், மாவட்ட கலெக்டர் இளம் பகவத், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், வன கால்நடை மருத்துவர் மனோகரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவி பிரம்ம சக்தி, திருச்செந்தூர் நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்

Tags:    

Similar News