உள்ளூர் செய்திகள்

லாரி மோதி வாலிபர் சாவு

Published On 2023-06-12 15:15 IST   |   Update On 2023-06-12 15:15:00 IST
  • அந்த வழியாக வந்த டாரஸ் லாரி ஒன்று அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
  • தூக்கி வீசப்பட்ட ரஞ்சித் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (வயது26). இவர்ஓசூர் ஆர்.டி.ஓ. சோதனை சாவடி பகுதி அருகே நேற்று தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது அந்த வழியாக வந்த டாரஸ் லாரி ஒன்று அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட ரஞ்சித் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் தகவலறிந்து உடனே அங்கு விரைந்து சென்று ரஞ்சித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News