உள்ளூர் செய்திகள்

வாலிபர் போக்சோவில் கைது

Published On 2023-01-10 13:36 IST   |   Update On 2023-01-10 13:36:00 IST
  • 15 வயது பள்ளி மாணவிக்கு சில நாட்களாக தொடர்ந்து தொல்லை.
  • போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள காரியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 22). டிரைவர்.

இவர், அப்பகுதியில் படிக்கும் 15 வயது பள்ளி மாணவிக்கு சில நாட்களாக தொடர்ந்து செல்போனில் ஆபாச செய்தி அனுப்பி வந்துள்ளார்.

இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

இந்தநிலையில் மாணவியின் தந்தை திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா (பொறுப்பு) வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News