உள்ளூர் செய்திகள்
- ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் நேற்று பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.
- மாநகராட்சி கவுன்சிலர் தேவி மாதேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி 21,23-வது வார்டிற்குட்பட்ட கொத்தூர் முதல் கொத்தகொண்டப்பள்ளி பிரதான சாலை, 100அடி சாலை பகுதியில் மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை புதுப்பித்தல் பணியை, ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் நேற்று பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.
மேலும் இதில், மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ், துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி கவுன்சிலர் தேவி மாதேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.