உள்ளூர் செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

Published On 2023-08-14 06:16 GMT   |   Update On 2023-08-14 06:16 GMT
  • ஆழமான பகுதிக்கு சென்ற யுகேந்திரன் தண்ணீரில் மூழ்கினார்.
  • ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊத்துக்கோட்டை:

ஆந்திரா மாநிலம் சூலூர்பேட்டை அரசு பொது மருத்துவமனை தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் யுகேந்திரன் (வயது 26). இவர் நண்பர்களுடன் ஊத்துக்கோட்டை அருகே உள்ள சூலைமேனி கிராமத்தில் உள்ள காட்டு செல்லியம்மன் கோவிலுக்கு சென்றார். சாமி தரிசனம் முடித்து விட்டு அனைவரும் அருகில் உள்ள குளத்தில் குளித்தனர்.

அப்போது, ஆழமான பகுதிக்கு சென்ற யுகேந்திரன் தண்ணீரில் மூழ்கினார். அவரை நண்பர்கள் மீட்டு ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். பரிசோதித்த டாக்டர்கள் யுகேந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யுகேந்திரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News