உள்ளூர் செய்திகள்

காவேரிப்பாக்கம் அருகே மகளிடம் அத்துமீறிய கிராம நிர்வாக அலுவலர் போக்சோவில் கைது

Published On 2023-08-02 13:19 IST   |   Update On 2023-08-02 13:19:00 IST
  • பள்ளியில் பிளஸ்-1 படித்து வரும் தனது மகளுக்கு, கிராம நிர்வாக அலுவலர் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
  • சிறுமியின் தாய் அரக்கோணம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அரக்கோணம்:

காவேரிப்பாக்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் கிராம நிர்வாக அலுவலர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர்.

அதேபகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வரும் தனது மகளுக்கு, கிராம நிர்வாக அலுவலர் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

நாளுக்கு நாள் இவரது தொல்லை அதிகரித்ததால் மாணவி தனது தாயிடம் நடந்ததை கூறியுள்ளார்.

இது குறித்து சிறுமியின் தாய் அரக்கோணம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, கிராம நிர்வாக அலுவலரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News