உள்ளூர் செய்திகள்

ஊரப்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 28 சவரன் தங்க நகை வெள்ளி கொலுசுகள் திருட்டு

Published On 2022-06-26 12:19 GMT   |   Update On 2022-06-26 12:19 GMT
  • செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் கணபதி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் சரவணன்.
  • சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் கணபதி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் சரவணன் (வயது 52), இவர் கடந்த 21-ஆம் தேதி வீட்டைப் பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் செங்கல்பட்டு அருகே உள்ள லத்தூர் கிராமத்திற்கு சென்றார். பின்னர் மீண்டும் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 28 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி கொலுசுகள் திருடுப் போனது தெரியவந்தது.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசில் சரவணன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News