திருக்கழுக்குன்றம் அருகே செல்போன் திருடிய வாலிபர் கைது
- போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை போலீசார் மடக்கி விசாரித்தனர்.
- பல இடங்களிலும் செல்போன் திருட்டில் ஈடுபட்டதாக தெரிவித்தார். போலீசார் அசோக்கை கைது செய்தனர்.
திருக்கழுக்குன்றம்:
திருக்கழுக்குன்றம் அடுத்த புலியூர் கிராம பகுதிகளில் பலரது செல்போன் தொடர்ந்து காணாமல் போனது. இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருத்தனர். அதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் திருக்கழுக்குன்றம் கொத்திமங்கலம் பைபாஸ் சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை போலீசார் மடக்கி விசாரித்தனர்.
அப்போது அவர் பூலியூர் பகுதியை சேர்ந்த அசோக்(வயது 23) என்பதும் அவரிடம் விலை உயர்ந்த பல செல்போன்கள் இருந்த நிலையில் போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்தினர். பல இடங்களிலும் செல்போன் திருட்டில் ஈடுபட்டதாக தெரிவித்தார். போலீசார் அசோக்கை கைது செய்தனர்.