விவசாயம், விவசாயிகளுக்கான திட்டங்களில் தமிழ்நாடு முன்னோடி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- புதிய பயிர் ரகங்கள், புதிய கண்டுபிடிப்புகள், வேளாண் கருவிகள் போன்றவை பற்றி விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
- தி.மு.க. ஆட்சியில் 5 பட்ஜெட்டுகளில் வேளாண்துறைக்கு ரூ.1.94 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் ரூ.631.48 கோடி மதிப்பில் கட்டப்பட்ட முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* உலகத்தை பசுமையாக்கிய ஒவ்வொருவருக்கும் உணவளிக்கும் விவசாயிகளால் சிந்தனையும் பசுமை ஆகிறது.
* உழவர்களின் பின்னால் தான் நாம் ஒன்றிணைந்து இருக்கிறோம் என்பதை காட்டும் வகையில் இந்த விழா அமைந்துள்ளது.
* விவசாயம், விவசாயிகளுக்கான திட்டங்களில் தமிழ்நாடு முன்னோடி.
* நமது வேளாண்மையை உலகத்தரத்திற்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்துள்ளது, அந்த வளர்ச்சி வேளாண் துறைக்கும் வந்து சேர வேண்டும்.
* தொழில்நுட்ப வளர்ச்சி விவசாயிகளை சென்று சேர்ந்தால் தான் அது உண்மையான வளர்ச்சி.
* தொழில்நுட்பங்களை தேடி விவசாயிகள் அலையக்கூடாது என்பதற்காக தான் வேளாண் கண்காட்சியை கொண்டு வந்துள்ளோம்.
* புதிய பயிர் ரகங்கள், புதிய கண்டுபிடிப்புகள், வேளாண் கருவிகள் போன்றவை பற்றி விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
* விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்பது, சேமிப்பது போன்றவற்றை விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
* விவசாயிகளுக்காக கண்காட்சியில் 13 தலைப்புகளில் கருத்தரங்கு, கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* விவசாயி வேடம் போட்டு சிலர் அரசியல் செய்வார்கள், விவசாயிகளை பாதிக்கிற சட்டத்தையும் ஆதரிப்பார்கள்.
* விவசாயி வேடத்தை போட்டுக்கொண்டு விவசாயிகளின் போராட்டங்களை கொச்சைப்படுத்தவும் செய்வார்கள்.
* தி.மு.க. ஆட்சியில் வேளாண் துறைக்கு 33 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* தி.மு.க. ஆட்சியில் 5 ஆண்டுகளாக மேட்டூர் அணை முறையாக உரிய நேரத்தில் திறக்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டில் 55,750 தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி உள்ளோம்.
* தி.மு.க. ஆட்சியில் 5 பட்ஜெட்டுகளில் வேளாண்துறைக்கு ரூ.1.94 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 20 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,600 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
* இந்தாண்டு கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* திருவண்ணாமலையில் ரூ.5 கோடியில் சிறப்பு சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும்
* பெரணமல்லூர் பகுதியில் 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும்.
* வேளாண் விளைபொருட்களை உலர்படுத்தி விற்பனை செய்ய ஏதுவாக ரூ.1 கோடி மதிப்பில் புதிய உலர் கூடம் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.