தமிழ்நாடு செய்திகள்

மகளிர் உரிமை தொகை என்ற பெயரில் ஆயிரம் ரூபாய் கொடுத்து ஓட்டு வாங்குகின்றனர் - சவுமியா அன்புமணி

Published On 2025-12-27 07:55 IST   |   Update On 2025-12-27 07:55:00 IST
  • பெண்களின் முன்னேற்றம், குழந்தைககளின் வாழ்க்கைகாக தான் இதுபோன்ற நிகழ்ச்சியை நாம் நடத்துகிறோம்.
  • அனைவரும் ஒற்றுமையாக அன்புமணி அண்ணனுடன் தங்கைகளாக நிற்க வேண்டும்.

மயிலாடுதுறை:

பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி, 'சிங்கப்பெண்ணே எழுந்து வா' மகளிர் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரசார பயணத்தை மேற்கொண்டுள்ளார். மயிலாடுதுறையில் பெண்கள் மத்தியில் சவுமியா அன்புமணி கலந்துரையாடினார். அவருக்கு பெண்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மயிலாடுதுறை தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் சவுமியா அன்புமணி பங்கேற்று பேசியதாவது:-

பெண்களின் முன்னேற்றம், குழந்தைககளின் வாழ்க்கைகாக தான் இதுபோன்ற நிகழ்ச்சியை நாம் நடத்துகிறோம்.

டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று கொண்டு வந்ததில் அன்புமணியின் முயற்சியும், போராட்டத்தையும் யாரும் மறுக்க முடியாது.

கொள்ளையடித்த பணத்தில் இருந்து ஓட்டுக்காக பணம் கொடுத்தனர். ஆனால் இப்போது மகளிர் உரிமை தொகை என்ற பெயரில் ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து ஓட்டு வாங்குகின்றனர். தேர்தல் நெருங்கி வரும்போது ஆயிரம் ரூபாய் எத்தனை ரூபாயாக பெருகுகிறது என்று தெரியாது. நீங்கள் ஏமாற வேண்டாம்.

பெண்கள் வெற்றி பெற்றால் தங்கள் பகுதிகளுக்கு வேண்டிய சாலை வசதி, மின்விளக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உங்களால் செய்து கொள்ள முடியும்.

எனவே அதிக அளவில் மகளிர் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட வேண்டும். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் மட்டுமே மது கடைகள் மூடப்படும், நமது குழந்தைகளின் எதிர்காலம் காக்கப்படும். எனவே, அனைவரும் ஒற்றுமையாக அன்புமணி அண்ணனுடன் தங்கைகளாக நிற்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News