உள்ளூர் செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல கலந்தாய்வு கூட்டம்- திருமாவளவன் சிறப்புரையாற்றுகிறார்

Published On 2023-12-02 12:43 IST   |   Update On 2023-12-02 12:43:00 IST
  • கோவை மண்டலத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
  • மாவட்டங்களுக்ககான கலந்தாய்வு கூட்டம் சேலம் ஓமலூரில் எம்.ஆர்.பி. இன்று பிற்பகல் நடைபெறுகிறது.

சேலம்:

திருச்சியில் வருகிற 23-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வெல்லும் ஜனநாயகம் என்ற தலைப்பில் மாநாடு நடைபெறுகிறது.

இதையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று கோவை மண்டலத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

அதன் தொடர்ச்சியாக சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்ககான கலந்தாய்வு கூட்டம் சேலம் ஓமலூரில் எம்.ஆர்.பி. முத்துமகால் திருமண மண்டபத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் .திருமாவளவன் சிறப்புரையாற்றுகிறார்.

Tags:    

Similar News