உள்ளூர் செய்திகள்

கோவை தொகுதியில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவில் சூலூர் முதலிடம்

Published On 2024-04-20 04:46 GMT   |   Update On 2024-04-20 04:46 GMT
  • சூலூர் அருகே ராசிபாளையத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.
  • கோவை வடக்கில் 58.74, சிங்காநல்லூரில் 59.33 சதவீத வாக்குகளும் பதிவாகியது.

கோவை:

கோவை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது.

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

கோவை பாராளுமன்ற தொகுதியில் காலை 7 மணி முதல் 9 மணி வரை 9.38 சதவீதம் வாக்குகளும், 11 மணி முதல் 1 மணி வரை 36.10 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.

1 மணி முதல் 3 மணி வரை 47.12 சதவீத வாக்குகளும், 3 மணி முதல் 5 மணி வரை 57.53 சதவீத வாக்குகளும் பதிவாகியது. கோவை மாவட்டத்தில் இறுதி நிலவரப்படி மொத்தம் 64.81 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளில் அதிகபட்சமாக சூலூரில் 75.33 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

பல்லடம் சட்டசபை தொகுதியில் 67.42 சதவீத வாக்குகளும், கோவை வடக்கில் 58.74, சிங்காநல்லூரில் 59.33 சதவீத வாக்குகளும் பதிவாகியது.

கோவை தெற்கில் 59.25 கவுண்டம்பாளையத்தில் 66.42 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன. கோவை பாராளுமன்ற தொகுதியிலேயே சூலூரில் தான் அதிகபட்ச வாக்குகள் பதிவாகி இருந்தது.

ஆனால் வழக்கம் போல மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை.

சூலூர் அருகே ராசிபாளையத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது. அதனை தொடர்ந்து மாற்று எந்திரம் வைக்கப்பட்டு, வாக்குப்பதிவு நடந்தது.

அங்கும் வாக்குப்பதிவு முடிந்த பிறகும் கூடுதலாக 2 மணி நேரம் அனுமதிக்கப்பட்டு இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.

Tags:    

Similar News