உள்ளூர் செய்திகள்

சிங்கப்பெருமாள் கோவில் அருகே கோவில் குளத்தில் குளித்தவர் மீன்வலையில் சிக்கி பலி

Published On 2022-06-08 14:56 IST   |   Update On 2022-06-08 14:56:00 IST
  • குளத்துக்குள் ஏற்கனவே மீன்களை பிடிப்பதற்கு வீசப்பட்ட வலை கிடந்தது.
  • குளத்தில் இருந்து வெளியே நீந்தி வரமுடியவில்லை. சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி ரவி பலியானார்.

செங்கல்பட்டு:

சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள திருக்கச்சூரை சேர்ந்தவர் ரவி (வயது 58). இவர் அதே பகுதியில் உள்ள கோவில் குளத்தில் குளிக்க சென்றார்.

அப்போது குளத்துக்குள் ஏற்கனவே மீன்களை பிடிப்பதற்கு வீசப்பட்ட வலை கிடந்தது. இதனை அறியாமல் ரவி குளித்தார். இதில் மீன்வலையில் அவர் சிக்கிக் கொண்டார்.

அவரால் குளத்தில் இருந்து வெளியே நீந்தி வரமுடியவில்லை. சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி ரவி பலியானார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மறைமலைநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News