உள்ளூர் செய்திகள்

வடபழனியில் வாடிக்கையாளர்போல் நடித்து கடையில் ரூ.40ஆயிரம் கொள்ளை

Published On 2023-10-26 09:00 GMT   |   Update On 2023-10-26 09:00 GMT
  • கட்டிட பொருட்கள் வாங்குவது போல சிமெண்ட், கம்பி உள்ளிட்ட பொருட்களின் விலை விபரங்களை கெஜின் அனித்திடம் கேட்டு பெற்றனர்.
  • வாடிக்கையாளர்கள் போல வந்த மர்மநபர்கள் 2பேரும் கவனத்தை திசை திருப்பி பணத்தை சுருட்டி சென்றது தெரிந்தது.

போரூர்:

சென்னை வடபழனி, சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் கெஜின் அனித். அதே பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று மாலை "டிப் டாப்" உடையணிந்த வாலிபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

அவர்கள் கட்டிட பொருட்கள் வாங்குவது போல சிமெண்ட், கம்பி உள்ளிட்ட பொருட்களின் விலை விபரங்களை கெஜின் அனித்திடம் கேட்டு பெற்றனர். பின்னர் நாளை வந்து பொருட்களை வாங்குவதாக கூறிவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர்.

சிறிது நேரம் கழித்து கெஜின் அனித் பார்த்த போது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 40 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது. வாடிக்கையாளர்கள் போல வந்த மர்மநபர்கள் 2பேரும் கவனத்தை திசை திருப்பி பணத்தை சுருட்டி சென்றது தெரிந்தது.

Tags:    

Similar News