உள்ளூர் செய்திகள்

விருகம்பாக்கத்தில் வாரம் ரூ.90 ஆயிரம் தருவதாக கூறி டாக்டரிடம் ரூ.15 லட்சம் மோசடி- ஒருவர் கைது

Published On 2022-11-04 09:28 GMT   |   Update On 2022-11-04 09:28 GMT
  • தங்களது நிறுவனத்தில் ரூ.15லட்சம் முதலீடு செய்தால் வாரம் தோறும் ரூ.90 ஆயிரம் பணம் கிடைக்கும் என்று ஆதவன் ஆசை வார்த்தை கூறினார்.
  • நம்பிய சுந்தரேசன் ரூ.15லட்சம் பணத்தை செலுத்தினார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட ஆதவன் கூறியபடி பணம் கொடுக்கவில்லை.

போரூர்:

கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன். டாக்டரான இவருக்கு நண்பர் ஒருவர் மூலம் விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெருவில் நிதி நிறுவனம் நடத்தி வந்த சாலிகிராமத்தை சேர்ந்த ஆதவன் என்பவர் அறிமுகமானார்.

அப்போது தங்களது நிறுவனத்தில் ரூ.15லட்சம் முதலீடு செய்தால் வாரம் தோறும் ரூ.90 ஆயிரம் பணம் கிடைக்கும் என்று ஆதவன் ஆசை வார்த்தை கூறினார்.

இதை நம்பிய சுந்தரேசன் ரூ.15லட்சம் பணத்தை செலுத்தினார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட ஆதவன் கூறியபடி பணம் கொடுக்கவில்லை.

இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த டாக்டர் சுந்தரேசன் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்ட ஆதவன், மேலாளர் சுபாஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் மேலாளர் சுபாசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. ஆதவனை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News