உள்ளூர் செய்திகள்

நெய்வேலியில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை

Published On 2022-08-13 04:55 GMT   |   Update On 2022-08-13 04:55 GMT
  • பிரபல ரவுடியான வீரமணி மீது நெய்வேலி டவுன் போலீஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.
  • கண்ணிமைக்கும் நேரத்தில் வீரமணியை மர்மநபர்கள் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

நெய்வேலி:

கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம்-30 பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரமணி (வயது 43). பிரபல ரவுடியான இவர் மீது நெய்வேலி டவுன் போலீஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று இரவு வீரமணி மனைவி மற்றும் குழந்தைகள் ஊருக்கு சென்று விட்டனர். வீரமணி மட்டும் இரவு வீட்டில் தூங்கினார்.

இன்று அதிகாலை சமயம் மர்மநபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் வீரமணியை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

இன்று காலை வீட்டில் இருந்து ரத்தம் வெளியே வழிந்தது. இதில் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் வீட்டில் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது ரவுடி வீரமணி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து நெய்வேலி தெர்மல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். வீரமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கொலை செய்த நபர்கள் யார்? எதற்காக இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர்? அவர்கள் எங்கு பதுங்கி உள்ளனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News