உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே கர்ப்பிணி விஷம் குடித்து மரணம்

Published On 2022-10-22 06:51 GMT   |   Update On 2022-10-22 06:51 GMT
  • கோமதி தன் வீட்டில் நெற்பயிருக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கீழே விழுந்தார்.
  • வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக கோமதியை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருவள்ளூர்:

திருவள்ளுரை அடுத்த புல்லரம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கிஷோர். இவர் அதே பகுதியை சேர்ந்த கோமதி (19) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கோமதி 8 மாத நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். ஆனால் கிஷோர் அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் மது போதையில் தன் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது.

கடந்த 17-ந் தேதி மீண்டும் கிஷோர் மது போதையில் வீட்டுக்கு வந்து தன் மனைவியை அடித்து உதைத்து கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த கோமதி தன் வீட்டில் நெற்பயிருக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கீழே விழுந்தார்.

வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோமதி நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கோமதியின் தாயார் நாகம்மாள் தன் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அதன் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.

Tags:    

Similar News