உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே வாலிபருக்கு வெட்டு

Published On 2022-07-08 13:31 IST   |   Update On 2022-07-08 13:31:00 IST
  • பொன்னேரி அருகே உள்ள காஞ்சிவாயில் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்.
  • பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பரிக்கப்பட்டு பகுதியை சேர்ந்த ஜெயபிரகாசை கைது செய்தனர்.

பொன்னேரி:

பொன்னேரி அருகே உள்ள காஞ்சிவாயில் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மோட்டார் சைக்கிளில் மெதூர் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மற்றொரு மோட்டார் சைக்கிளில் இளம் பெண்களுடன் சென்ற வாலிபரை 2 மர்ம நபர்கள் வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். இதனை மணிகண்டன் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் 2 பேரும் கத்தியால் மணிகண்டனை வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பரிக்கப்பட்டு பகுதியை சேர்ந்த ஜெயபிரகாசை கைது செய்தனர்.

Tags:    

Similar News