உள்ளூர் செய்திகள்

சிதம்பரத்தில் நர்சுக்கு கொலை மிரட்டல் விடுத்த நாகை வாலிபர் கைது

Published On 2023-05-15 14:46 IST   |   Update On 2023-05-15 14:46:00 IST
  • அன்பரசன் பேஸ்புக்கில் பதிவிடும் பதிவுகள் சந்திரகலாவிற்கு பிடிக்காததால், அவருடனான நட்பை முறித்துக்கொண்டார்.
  • ஆத்திரமடைந்த அன்பரசன் சந்திரகலாவை தொடர்பு கொள்ள முயற்சித்தார். இதில் சந்திரகலா போனை எடுக்கவில்லை.

சிதம்பரம்:

சிதம்பரம் காரியபெருமாள் வீதியில் வசிப்பவர் இளவரசன். இவரது மனைவி சந்திரகலா (வயது 36). சென்னையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் தனியே வசித்து வருகிறார். இவருக்கு நாகை மாவட்டம் கள்ளிமேடு பகுதி அன்பரசன் (33) என்பவருடன் பேஸ்புக்கில் நட்பு ஏற்பட்டு பழகி வந்தனர்.

இந்நிலையில் அன்பரசன் பேஸ்புக்கில் பதிவிடும் பதிவுகள் சந்திரகலாவிற்கு பிடிக்காததால், அவருடனான நட்பை முறித்துக்கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த அன்பரசன் சந்திரகலாவை தொடர்பு கொள்ள முயற்சித்தார். இதில் சந்திரகலா போனை எடுக்கவில்லை.

இதனை தொடர்ந்து அன்பரசன் நாகையில் இருந்து சிதம்பரம் வந்தார். சந்திரகலாவை சந்தித்து பேஸ்புக் பதிவுகள் குறித்து விளக்கம் அளித்தார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அன்பரசன் சந்திரகலாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து சந்திரகலா அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி அன்பரசன் மீது வழக்கு பதிவு செய்தார். மேலும், அன்பரசனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News