உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்ற பைக் ரைடர் பலி

Published On 2024-03-04 04:43 GMT   |   Update On 2024-03-04 04:43 GMT
  • மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி அருகில் உள்ள ஒரு வீட்டின் சுவற்றின் மீது மோதியது.
  • கோகுல கிருஷ்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட திருமேனி செட்டி தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மகன் கோகுலகிருஷ்ணன் (வயது 20). தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

இவர் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்து அதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு இவர் தனது நண்பருடன் புத்தூரில் உள்ள கடையில் டீ குடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்துள்ளார். அப்போது பைகரா வளைவில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி அருகில் உள்ள ஒரு வீட்டின் சுவற்றின் மீது மோதியது.

இதில் கோகுல கிருஷ்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த அவரது நண்பருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவ்வழியாக வந்தவர்கள் அவர்களை நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த விபத்தில் இளைஞர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளின் முன்பகுதி முற்றிலும் சேதமானது. இதுகுறித்து நாகை நகர போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்ற வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News