உள்ளூர் செய்திகள்

மேட்டுக்குப்பம் அருகே இளம்பெண் தற்கொலை

Published On 2022-07-18 12:25 IST   |   Update On 2022-07-18 12:25:00 IST
  • மேட்டுக்குப்பம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன்.
  • இளம்பெண் தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

மேட்டுக்குப்பம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன். பெயிண்டர். இவரது மனைவி லதா (26). நேற்று இரவு மது போதையில் வீடு திரும்பிய சரவணனை அவரது மனைவி கண்டித்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த லதா திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News