உள்ளூர் செய்திகள்

மணவாளநகர் அருகே உடற்பயிற்சி கூடத்தில் திருட்டு

Published On 2023-06-29 17:54 IST   |   Update On 2023-06-29 17:54:00 IST
  • உடற்பயிற்சி கூடத்தில் இருந்த ஸ்பின் பைக், ட்ரெட் மில் ஆகிய உடற்பயிற்சி செய்யும் பொருட்கள் திருடப்பட்டு இருப்பதாக தெரியவந்தது.
  • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மணவாளநகர்:

திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வசிப்பவர் தினேஷ் (வயது 40). இவர் மணவாளநகர் பகுதியில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார். கடந்த 26-ந் தேதி இவர் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று பார்த்தார். அப்பொழுது உடற்பயிற்சி கூடத்தில் இருந்த ஸ்பின் பைக், ட்ரெட் மில் ஆகிய உடற்பயிற்சி செய்யும் பொருட்கள் திருடப்பட்டு இருப்பதாக தெரியவந்தது.

இதுகுறித்து தினேஷ் மணவாளநகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News