உள்ளூர் செய்திகள்

மணவாளநகர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

Published On 2023-06-25 06:45 GMT   |   Update On 2023-06-25 06:45 GMT
  • வைஷ்ணவி நகரைச் சேர்ந்த கார்த்திக் என்பவரது மோட்டார் சைக்கிளையும் கொள்ளையர்கள் திருடி சென்றனர்.
  • மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் கம்மவார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார்.

இதனை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதேபோல் மணவாளநகர் அடுத்த போளிவாக்கம் வைஷ்ணவி நகரைச் சேர்ந்த கார்த்திக் என்பவரது மோட்டார் சைக்கிளையும் கொள்ளையர்கள் திருடி சென்றனர்.

இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News