உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரம் அருகே கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை

Published On 2023-06-03 11:51 IST   |   Update On 2023-06-03 11:51:00 IST
  • கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கணவர் மணிகண்டன் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார்.
  • மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி காவ்யா (வயது21). இவர்களுக்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருமணமானது. கணவன்-மனைவி இருவரும் சென்னையில் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கணவர் மணிகண்டன் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார்.

இதையடுத்து காவ்யாபட்டிபுலம் பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார். கணவர் இறந்த துக்கத்தில் விரக்தியில் இருந்து வந்த காவ்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News