உள்ளூர் செய்திகள்

கோயம்பேட்டில் விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை

Published On 2023-05-29 08:49 GMT   |   Update On 2023-05-29 08:49 GMT
  • கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போரூர்:

கோயம்பேடு, பஸ் நிலையம் எதிரே உள்ள ஜெய்நகர் 11-வது தெருவில் சுந்தர விநாயகர் கோவில் உள்ளது.இன்று காலை வழக்கம் போல கோவிலை திறக்க பூசாரி வந்தார்.

அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து கோவில் நிராவாகி ரகுராம் கோயம்பேடு பஸ் நிலைய போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News