உள்ளூர் செய்திகள்
காஞ்சிபுரம் அருகே 2 வீடுகளில் திருட்டு- கொள்ளையர்கள் தப்பி செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவு
- மின்வாரிய ஊழியர் அருள்குமார், மற்றும் மாரியப்பன் ஆகியோர் வீடுகளில் ஒரே நாளில் நகை, பணம் கொள்ளை போனது.
- கொள்ளையர்களை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூட்டி கிடந்த மின்வாரிய ஊழியர் அருள்குமார், மற்றும் மாரியப்பன் ஆகியோர் வீடுகளில் ஒரே நாளில் நகை, பணம் கொள்ளை போனது.
இதுகுறித்து பாலு செட்டிசத்திரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் கொள்ளையர்கள் 2 பேரும் தப்பி செல்வது பதிவாகி உள்ளது. இதனை வைத்து கொள்ளையர்களை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.