உள்ளூர் செய்திகள்

கல்பாக்கத்தில் கடன் தொல்லையால் நகைக்கடை ஊழியர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-08-23 15:23 IST   |   Update On 2022-08-23 15:23:00 IST
  • கல்பாக்கத்தில் நகைக்கடையில் வேலை போனதாலும், கடனை அடைக்க முடியாத காரணத்தாலும் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை கொண்டார்.
  • கடிதத்தை கைப்பற்றி கல்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமல்லபுரம்:

கல்பாக்கம் புதுப்பட்டினம் ராஜீவ்காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது.25) நகைக்கடை ஊழியரான இவர், கடன் தொல்லை காரணமாக கடிதம் ஒன்று எழுதி வைத்து விட்டு நேற்று இரவு வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடிதத்தில் எழுதி இருப்பதாவது:- நகைக்கடையில் வேலை போனதால் என்னால் வீட்டு கடன், தனிநபர் கடன், பைக் கடன் என தகுதிக்கு மீறி வாங்கிய கடன்களை மாதம்தோறும் அடைக்க முடியவில்லை. வீட்டின் அருகில் நடந்த நகைத்திருட்டு சம்பவத்திலும் என்னை சேர்த்து பேசுகிறார்கள். அதனால் வாழ பிடிக்கவில்லை. அக்கா நீ அம்மாவை பார்த்துக்கொள் என எழுதி இருந்தது.

இக்கடிதத்தை கைப்பற்றி கல்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News