உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்வு

Published On 2023-06-04 04:44 GMT   |   Update On 2023-06-04 04:44 GMT
  • கடந்த 2-ந்தேதி நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை ரூ.5.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
  • முட்டை விலை நேற்று மீண்டும் 5 பைசா உயர்த்தப்பட்டு, மைனஸ் இல்லாத பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்:

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) தினசரி பண்ணையில் விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது.

கடந்த 2-ந்தேதி நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை ரூ.5.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று முட்டை விலை மீண்டும் 5 பைசா உயர்த்தப்பட்டு, மைனஸ் இல்லாத பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்): சென்னை-570, பர்வாலா-472, பெங்களூர்-565, டெல்லி-491, ஹைதராபாத்-495, மும்பை-560, மைசூர்-572, விஜயவாடா-515, ஹொஸ்பேட்-525, கொல்கத்தா-540.

பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.128 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.107 ஆக நிர்ணயித்துள்ளது.

Tags:    

Similar News