உள்ளூர் செய்திகள்

டிசம்பர்-5-ந் தேதி நினைவு நாள்: ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை

Published On 2024-11-27 14:40 IST   |   Update On 2024-11-27 14:40:00 IST
  • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.
  • கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் கலந்துகொண்டு மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சென்னை:

அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு நாளான டிசம்பர் 5-ந்தேதி காலை 10 மணியளவில் சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

அதனையடுத்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது நினைவிட நுழைவு வாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் கலந்துகொண்டு மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News