உள்ளூர் செய்திகள்
திருவள்ளூர் அருகே வாகன கடன் தகராறில் டிரைவர் மீது தாக்குதல்
- மப்பேடு அடுத்த நரசிங்கபுரம் அருகே வேனை ஓட்டிவந்தபோது 6 பேர் கும்பல் அவரை வழிமறித்து பணம் கட்டாதது தொடர்பாக தகராறில் ஈடுபட்டு தாக்கினர்.
- அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரத்து 500-யை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த கள்ளம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மன். டிரைவர். இவர் சென்னையைச் சேர்ந்த பைனான்சியர் ஒருவரிடம் தவணை முறையில் பணம் செலுத்தி வேன் வாங்கி ஓட்டி வந்தார். இதற்கான பணத்தை அவர் சரிவர கட்டவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் மப்பேடு அடுத்த நரசிங்கபுரம் அருகே வேனை ஓட்டிவந்தபோது 6 பேர் கும்பல் அவரை வழிமறித்து பணம் கட்டாதது தொடர்பாக தகராறில் ஈடுபட்டு தாக்கினர்.
மேலும் அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரத்து 500-யை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.