உள்ளூர் செய்திகள் (District)

தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது

Published On 2023-07-14 05:13 GMT   |   Update On 2023-07-14 05:13 GMT
  • பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ந்தேதி வரை நடைபெறுகிறது.
  • தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது.

சென்னை:

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ந்தேதி வரை நடைபெறுகிறது. இக்கூட்டத்தொடரில் பங்கேற்று விவாதிப்பது தொடர்பாக தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, இன்று காலை தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது.

மழைக்கால கூட்டத்தொடரில் கவர்னர் ஆர்.என். ரவி விவகாரம், பொதுசிவில் சட்டம், மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News