உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் மாநகராட்சி 36-வது வார்டு இடைத்தேர்தல்- சாலையில் கிடந்த தங்க மோதிரத்தை போலீசில் ஒப்படைத்த தி.மு.க. வேட்பாளர்

Published On 2022-06-28 08:00 GMT   |   Update On 2022-06-28 08:00 GMT
  • காஞ்சிபுரம் மாநகராட்சியில் நிறுத்திவைக்கப்பட்ட 36-வது வார்டுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாநகராட்சியில் நிறுத்திவைக்கப்பட்ட 36-வது வார்டுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று காலை 12 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்ய தி.மு.க. வேட்பாளர் சுதா என்கின்ற சுப்பராயன் வந்தார். வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு நரசிங்கராயர் தெரு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் 4 கிராம் தங்க மோதிரம் கேட்பாரற்று கிடந்தது. அதனை எடுத்த சுப்பராயன் இதுபற்றி மாவட்ட செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தார். பின்னர் அவர் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகரை நேரில் சந்தித்து மோதிரத்தை வழங்கினார். அப்போது நெசவாளர் அணி அமைப்பாளர் தமிழ்ச்செல்வன், மாநகராட்சி கவுன்சிலர்கள் சங்கர், கார்த்திக் உடன் இருந்தனர்,

Tags:    

Similar News