உள்ளூர் செய்திகள்

புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திமுக அறிவிப்பு

Published On 2023-05-24 11:18 IST   |   Update On 2023-05-24 11:18:00 IST
  • புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு கண்டனம்.
  • திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காததை கண்டித்து எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணிக்கின்றனர்.

சென்னை:

டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல, என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.

இதையடுத்து, புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிபிஐ, சிபிஎம், ஆர்ஜேடி, விசிக உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்திருந்த நிலையில் தி.மு.க.வும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதை கண்டித்தும், திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காததை கண்டித்தும் எதிர்க்கட்சிகள் இவ்விழாவை புறக்கணிக்கின்றனர்.

Tags:    

Similar News