உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் இன்று மாலை கொங்கு மண்டல காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Published On 2022-09-03 09:37 IST   |   Update On 2022-09-03 09:37:00 IST
  • ராகுல் காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரை குறித்த கொங்கு மண்டல காங்கிரஸ் நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் ஈரோட்டில் இன்று மாலை நடைபெறுகிறது.
  • ஆய்வு கூட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமை தாங்குகிறார்.

ஈரோடு:

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி எம்.பி. 3,750 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

கன்னியாகுமரியில் வரும் 7-ந்தேதி பாதயாத்திரையை தொடங்கும் ராகுல் காந்தி 12 மாநிலங்கள் வழியாக காஷ்மீர் சென்றடைகிறார். தினமும் 7 மணி நேரம் பாதயாத்திரை மேற்கொள்ள ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார்.

அவருடன் காங்கிரஸ் நிர்வாகிகள் 400 பேர் உடன் செல்கின்றனர். கிட்டத்தட்ட 150 நாட்கள் தொடர்ந்து பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தி இறுதியில் காஷ்மீரில் தனது பாத யாத்திரையை நிறைவு செய்கிறார்.

வருகிற 7-ந் தேதி ராகுல் காந்தியின் பாதை யாத்திரையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதனால் காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்நிலையில் ராகுல் காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரை குறித்த கொங்கு மண்டல காங்கிரஸ் நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் ஈரோட்டில் இன்று மாலை நடைபெறுகிறது. கூட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி தலைமை தாங்குகிறார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலை வகிக்கிறார். தங்கபாலு, திருநாவுக்கரசு, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில் ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் ராகுல் காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரை குறித்து விவாதிக்கப்படுகிறது.

Tags:    

Similar News