சித்தோட்டில் வீட்டில் பதுக்கி வைத்து போதை மாத்திரைகள் விற்பனை
- ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோட்டில் ஒரு வீட்டில் போதை மாத்திரைகள் பதுக்கி வைத்து விற்பனை.
- மாத்திரைகள் சேலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
சித்தோடு:
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோட்டில் ஒரு வீட்டில் போதை மாத்திரைகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சித்தோடு ராயப்பாளையம் புதூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் ஒரு பெட்டியில் ஏராளமான மாத்திரைகள் இருந்தது. இதைகைப்பற்றி விசாரித்த போது அவை போதை மாத்திரைகள் என்று தெரிய வந்தது.
இதையடுத்து அந்த வீட்டில் இருந்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் சித்தோடு ராயப்பாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்த திலிப் குமார் (23), வினித் குமார் (22) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஈரோட்டைச் சேர்ந்த ஒருவரிடம் போனில் தொடர்பு கொண்டு இந்த போதை மாத்திரைகளை வாங்கியதாக தெரிவித்தனர்.
மேலும் இந்த மாத்திரைகள் சேலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையன் வழக்குப்பதிவு செய்து வீட்டில பதுக்கி வைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்த திலிப்குமார், வினித்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 28 போதை மாத்திரை பெட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக முக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.