உள்ளூர் செய்திகள்

கார் கவிழ்ந்து சென்னை ஐ.டி. பெண் ஊழியர் பலி

Published On 2024-02-20 04:58 GMT   |   Update On 2024-02-20 04:58 GMT
  • படுகாயம் அடைந்த நேஹா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜோலார்பேட்டை:

கர்நாடகா மாநிலம், பெங்களூர் ஸ்டெர்லிங் குரூப் அப்பார்ட்மெண்ட் பகுதியைச் சேர்ந்தவர் தன்னுஜ் (வயது 36). இவரது மனைவி நேஹா (35). தம்பதியினருக்கு டக்ஸ் (4) என்ற குழந்தை உள்ளது.

கணவன்-மனைவி இருவரும் சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்தனர்.

தம்பதியினர் குழந்தையுடன் இன்று அதிகாலை கார் மூலம் பெங்களூர் நோக்கி சென்றனர். காரை தன்னுஜ் ஓட்டினார்.

திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பைனப்பள்ளி அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தறிகெட்டு ஓடியது. சாலையோரம் இருந்த விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் படுகாயம் அடைந்த நேஹா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தை மற்றும் தன்னுஜ் ஆகிய 2 பேர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

நேஹா பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News