உள்ளூர் செய்திகள்

டெல்லியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் ஏ.சி.சண்முகம் பங்கேற்கிறார்

Published On 2023-07-18 09:49 GMT   |   Update On 2023-07-18 09:49 GMT
  • புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அழைப்பு விடுத்தார்.
  • தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் ஏ.சி.சண்முகம் பங்கேற்கிறார்.

சென்னை:

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வருமாறு புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் ஏ.சி.சண்முகம் பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார்.

Tags:    

Similar News