உள்ளூர் செய்திகள்

மரக்கன்று நடப்பட்டது.

விவசாயிக்கு மரக்கன்றுகள் வழங்கல்

Published On 2022-07-25 08:54 GMT   |   Update On 2022-07-25 08:54 GMT
  • ஒரு விவசாயிக்கு 51 தென்னை மரக்கன்றுகளை பசுமை பிறந்த நாளாக வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
  • பயனாளிக்கு 6 அடி உயர ஒரு பலா, கொய்யா, நாவல் மரக்கன்றும், ஒரு தேக்கு மரக்கன்றும் வழங்கப்பட்டது.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் தனியார் பள்ளிமுன்னாள் மாணவர்கள், ஆசிரியை புவனேஸ்வரி ஆகியோர் சேர்ந்து கோவில் பத்து கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயிக்கு 51 தென்னை மரக்கன்றுகளை பசுமை பிறந்த நாளாக கொண்டாடி மகிழ்ந்தனர். ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளையின் ஸ்ரீஅறுபடை பசுமை சிறகுகளின் ஒருங்கிணைப்பாளர் கோவில்பத்து விவசாயிக்கு மாரியப்பன் பயனாளியை தேர்வு செய்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.

சிட்டுக் குருவிக்கான கூண்டினை அழகேசன் வழங்கினார்.ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளையின் ஸ்ரீ அறுபடை பசுமை சிறகுகள் சார்பில் பயனாளிக்கு 6 அடி உயர ஒரு பலா, கொய்யா, நாவல் மரக்கன்றும் ஒரு தேக்கு மரக்கன்றும் வழங்க ப்பட்டது.நிகழ்ச்சியில் ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளை நிறுவனர் ராஜ சரவணன் மற்றும் சங்கதினர் சார்பில் செந்தில் குமார் ராஜு ஒருங்கிணைத்தார்.

Tags:    

Similar News