உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கல்

Published On 2023-10-31 09:10 GMT   |   Update On 2023-10-31 09:10 GMT
  • விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
  • நிகழ்ச்சியில் வேளாண் அலுவலர்கள் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், வடக்கு மாங்குடி ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வடக்கு மாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி கனகராஜ் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் வேளாண் அலுவலர்கள் விவசாயிகள், என பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News