உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கல்

Published On 2023-07-22 10:09 GMT   |   Update On 2023-07-22 10:09 GMT
  • மருதாநல்லூர் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
  • ஏக்கருக்கு 100 சதவீத உரம் மானியமாக, யூரியா, டி.ஏ.பி மற்றும் பொட்டாஷ் ஆகியவற்றின் தொகுப்புகள் வழங்கப்பட்டது.

கும்பகோணம்:

கும்பகோணம் வட்டாரம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் மருதாநல்லூர் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம், மருதாநல்லூர் ஊராட்சியில் ஒரு ஏக்கருக்கு 100 சதவீத உரம் மானியமாக, யூரியா, டி.ஏ.பி மற்றும் பொட்டாஷ் ஆகியவற்றின் தொகுப்புகளை விவசா யிகளுக்கு, சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

நிகழ்ச்சியில் கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவரும், மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளருமான கணேசன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுதாகர், ஊராட்சி தலைவர்கள் ரவி, சந்திர சேகரன், மாவட்ட பிரதிநிதி கரிகாலன், ஒன்றியக்குழு உறுப்பினர் சசிகுமார், ஊராட்சி துணை தலைவர் ராஜலெட்சுமி சேகர், முன்னாள் ஊராட்சி துணை தலைவர் சேதுராமன், உதவி வேளாண்மை அலுவலர் அலெக்ஸ்சாண்டர், மருதாநல்லூர் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் கமல்ராஜ், துணை தலைவர் சிவசங்கரன், இயக்குநர்கள் தமிழரசி, செல்வம், தி.மு.க. கிளை செயலாளர்கள் குமார், வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News