உள்ளூர் செய்திகள்

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கோடைகால கால்பந்து போட்டி நடைபெற்றது.

கடலூரில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கோடைகால கால்பந்து போட்டி

Published On 2023-05-28 07:48 GMT   |   Update On 2023-05-28 07:48 GMT
  • கோடைகால கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.
  • இன்று மாலை பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

கடலூர்:

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கோடைகால கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் கடலூர், நெய்வேலி, பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து 15-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு இன்று மாலை பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

இதற்கு வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமை தாங்கி பரிசுகளை வழங்குகிறார். நிகழ்ச்சியில் ஆய்வாளர் குருமூர்த்தி மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

Tags:    

Similar News